Tuesday, August 16, 2011

மழை விடு தூது!

மழையினை தூது விட்டாளோ?
ஒவ்வொரு துளியிலும் 
அவள் முகம்!
தரையினை தொடுகையில்
அவள் குரல்!
மின்னல் அடிக்கையில் 
அவள் குரல்!


இடி இடிக்கையில்
அவள் பேச்சு!
மண் தொடும்போது 
அவள் வாசம்!
குளிர்காற்று மேனி தொட்டபோது 
அவள் முத்தம்!
மழையே நின்று விடாதே
என் தாகம் தீரும் வரை!
உன்னை தூது விட்டவள்
என்னை சேரும் வரை! 

2 comments:

  1. மழையே நின்று விடாதே
    என் தாகம் தீரும் வரை!
    உன்னை தூது விட்டவள்
    என்னை சேரும் வரை!

    ReplyDelete
  2. Its Awesome da.I have everseen like this from you..........!!I think this s the most i loved in ur collections.

    ReplyDelete