Tuesday, August 16, 2011

மழை விடு தூது!

மழையினை தூது விட்டாளோ?
ஒவ்வொரு துளியிலும் 
அவள் முகம்!
தரையினை தொடுகையில்
அவள் குரல்!
மின்னல் அடிக்கையில் 
அவள் குரல்!


இடி இடிக்கையில்
அவள் பேச்சு!
மண் தொடும்போது 
அவள் வாசம்!
குளிர்காற்று மேனி தொட்டபோது 
அவள் முத்தம்!
மழையே நின்று விடாதே
என் தாகம் தீரும் வரை!
உன்னை தூது விட்டவள்
என்னை சேரும் வரை! 

Tuesday, August 9, 2011

என் அழகு காதலி !

காதல் மகாராணி
கவிதைத்தேரில் வர
கவிஞன் நான் எழுதினேன்!

என் கவிதைகள்
அவளை அலங்கரித்து
ஊரையே அசத்தினாலும்
ஒன்று கூட அவளை விட
அழகாய் இல்லை........!

Tuesday, July 12, 2011

என்னவள்!

கண்கள் அவளுடையது!
ஆனால் அது கொண்ட காதல்
என்னுடையது!
கூந்தல் அவளுடையது!
ஆனால் அதைப்போல்
அலை பாயும் மனம் என்னுடையது!

உடல் தான் அவளுடையது!
அதனுள்ளே உயிர் என்னுடையது!
என்னை தொட்டு செல்லும்
காற்றுக்கும் உயிருண்டு
ஒருவேளை அது
அவள் சுவாசமாக இருந்திருந்தால்!
 நான் எழுதும் கவிதைகளுக்கும்
உயிருண்டு!
ஒருவேளை அதன் கருப்பொருளாய்
அவள் இருந்தால்!