Tuesday, July 12, 2011

என்னவள்!

கண்கள் அவளுடையது!
ஆனால் அது கொண்ட காதல்
என்னுடையது!
கூந்தல் அவளுடையது!
ஆனால் அதைப்போல்
அலை பாயும் மனம் என்னுடையது!

உடல் தான் அவளுடையது!
அதனுள்ளே உயிர் என்னுடையது!
என்னை தொட்டு செல்லும்
காற்றுக்கும் உயிருண்டு
ஒருவேளை அது
அவள் சுவாசமாக இருந்திருந்தால்!
 நான் எழுதும் கவிதைகளுக்கும்
உயிருண்டு!
ஒருவேளை அதன் கருப்பொருளாய்
அவள் இருந்தால்!