அன்றாடம் அவலங்கள்
சமுதாய சீரழிவுகள்
தட்டிக்கேட்க துடித்தேன்
கண்டும் காணமல் நடித்தேன்
அரிவாள் எடுக்க அஞ்சவில்லை
அன்பு குடும்பத்திற்காக தயங்கினேன்
தயங்கியதோடு நிற்கவில்லை
எழுத்தால் வெள்ளையனையே
விரட்டியடித்த
பாரதியின் கைப்பிடித்தேன்
ஆயுதமாய் எழுதுகோல்
எடுத்தேன்!
என் எழுத்து யாவற்றையும்
திருத்துமோ இல்லையோ?
திருந்துபவர்கள் திருந்தட்டும்!
அதுவரை என் எழுதுகோல்
எழுதட்டும்!
என் எழுத்து தொடரட்டும்!
No comments:
Post a Comment