Sunday, December 19, 2010

en ezhuthu en deivam

அன்றாடம் அவலங்கள்
சமுதாய சீரழிவுகள்
தட்டிக்கேட்க துடித்தேன்
கண்டும் காணமல் நடித்தேன்
அரிவாள் எடுக்க அஞ்சவில்லை
அன்பு குடும்பத்திற்காக தயங்கினேன்
தயங்கியதோடு நிற்கவில்லை
எழுத்தால் வெள்ளையனையே
விரட்டியடித்த
பாரதியின் கைப்பிடித்தேன்
ஆயுதமாய் எழுதுகோல்
எடுத்தேன்!
என் எழுத்து யாவற்றையும்
திருத்துமோ இல்லையோ?
திருந்துபவர்கள் திருந்தட்டும்!
அதுவரை என் எழுதுகோல்
எழுதட்டும்!
என் எழுத்து தொடரட்டும்!

No comments:

Post a Comment